பேலியகொடை கொவிட் கொத்தணி அதிகரிப்பு.

 பேலியகொடை கொவிட் கொத்தணி அதிகரிப்பு.


இலங்கையில் நேற்றைய (26) தினம் அடையாளம் காணப்பட்ட 272 கொவிட் வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

இவர்களின் எண்ணிக்கை 55 ஆகும். 

மேலும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 40 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 28 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நேற்றைய தொற்றாளர்களில் 12 பேர் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

ஏனைய அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,561 ஆக அதிகரித்துள்ளது. 

அவர்களில் 88,145 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

மேலும், 2,858 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை சிகிச்சை பலனின்றி 558 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 14,455 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டள்ளது. 

அதன்படி, நாட்டில் இதுவரை 884,164 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.