புர்காவை தடை செய்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

 புர்காவை தடை செய்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.


புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு தடையை விதிப்பதற்கான தீர்மானம் எதுவும் இதுவரை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு இன்று (16) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

"இது ஒரு முன்மொழிவு மாத்திரமேயாகும். இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகின்றது" என வெளியுறவுச் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

"ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவாக, தொடர்ந்தும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனுமான ஒரு பரந்த உரையாடலை அரசாங்கம் ஆரம்பிப்பதுடன், தேவையான ஆலோசனைகள் நடைபெறுவதற்காகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகவும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என வெளியுறவுச் செயலாளர் மேலும் கூறினார்.

நாட்டில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

இதற்கு பதலளிக்கும் வகையில் வெளியுறவுச் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேயினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.