வாகன விபத்துக்களினால் நாளாந்தம் இறப்போரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

வாகன விபத்துக்களினால் நாளாந்தம் இறப்போரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

𝑰𝑻𝑴▪️புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இலங்கையில் வருடாந்தம் மூவாயிரத்துக்கும் அதிகமான விபத்துகள் இடம்பெறுகின்றன. 2018-ஆம் ஆண்டில் வாகன விபத்துக்களின் மூலம் 3,154 பேர் உயிரிழந்துள்ளனர்.

𝑰𝑻𝑴▪️அத்துடன், 2019 ஆம் ஆண்டில் 2,852 பேரும் 2020 ஆம் ஆண்டு ஆறு மாத காலத்தினுள் 1242 பேரும் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர்.

𝑰𝑻𝑴▪️கடந்த காலங்களில் நாளாந்தம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூலம் எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அது தற்போது இத்தொகை 11 ஆக அதிகரித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️மேலும், 2018ம் ஆண்டு வாகன விபத்துக்களின் மூலம் அங்கவீனமுற்றவர்களின் எண்ணிக்கை 9,391 ஆகும். 2019 ஆம் ஆண்டளவில் அது 11 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.