கடந்த 24 மணித்தியாலங்களில் 11 பேர் பலி! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 11 பேர் பலி! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐌𝐄𝐃𝐈𝐀


𝑰𝑻𝑴▪️வீதி விபத்துகளினால் இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இந்நிலையில் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்போச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

𝑰𝑻𝑴▪️வீதி விபத்துகள் காரணமாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது நேற்று இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ஆறு பேரும், இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி காயமடைந்திருந்த 5 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மாத்திரம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஏப்ரல் மாதத்திலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அதனை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகம் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.