வாகன விபத்துக்களில் 30 பேர் பலி. 150 பேர் காயம். ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்பு நேற்று பதிவானது.
வாகன விபத்துக்களில் 30 பேர் பலி. 150 பேர் காயம். ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்பு நேற்று பதிவானது.
𝑰𝑻𝑴▪️கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
𝑰𝑻𝑴▪️பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனை உறுதிப்படுத்தினார்.
𝑰𝑻𝑴▪️இவ்வாறு இடம்பெற்ற விபத்துக்களில் 150 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
𝑰𝑻𝑴▪️இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
𝑰𝑻𝑴▪️நேற்றைய தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்ததுடன், நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 8 பேர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.
𝑰𝑻𝑴▪️கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், ஒரேநாளில் அதிகளவானோர் வாகன விபத்துக்களில் நேற்றைய தினமே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
𝑰𝑻𝑴▪️நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
𝑰𝑻𝑴▪️அத்துடன், உயிரிழந்த 16 பேரில், 12 பேர் மோட்டார் சைக்கிள் ஒட்டுநர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.