தூர இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் வருவதற்காக இன்று முதல் விசேட பஸ் சேவை.

தூர இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் வருவதற்காக இன்று முதல் விசேட பஸ் சேவை.

𝑰𝑻𝑴▪️பண்டிகை காலத்தில் தூர இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் வருவதற்காக இன்று முதல் மேலதிகமாக 3 ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, இன்று முதல் விசேட பஸ் சேவை இடம்பெறும் என்றும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️கொவிட் தொற்றுக் காரணமாக சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களும் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும். பயணிகளின் நெரிசல் காணப்படும் பட்சத்தில் மாகாண சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தற்காலிக அனுமதிப்பத்திரத்தின் கீழ் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென திரு.விஜித குமார குறிப்பிட்டார்.

𝑰𝑻𝑴▪️இன்று முதல் தூர இடங்களுக்கான ரெயில் சேவையும் வழமை போன்று இடம்பெறும் என ரெயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அனைத்து ரெயில்களும் வழமையான சேவையில் ஈடுபடும் என திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.