ரயில் கடவை வேலியை, ரயில் சாரதியே இறங்கி மூடிய சம்பவம்.

ரயில் கடவை வேலியை, ரயில் சாரதியே இறங்கி மூடிய சம்பவம்.

𝑰𝑻𝑴▪️அம்பலாங்கொட − கந்தேகொட பகுதியில் ரயிலின் சாரதி, ரயிலில் இருந்து இறங்கிவந்து, ரயில் கடவையிலுள்ள பாதுகாப்பு வேலியை மூடியுள்ளார்.

𝑰𝑻𝑴▪️இந்த சம்பவம் கடந்த 14ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

𝑰𝑻𝑴▪️கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த தபால் ரயிலின் சாரதியே, இவ்வாறு பாதுகாப்பு வேலியை மூடியுள்ளார்.

𝑰𝑻𝑴▪️குறித்த ரயில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கந்தேகொட பகுதியிலுள்ள சமிக்ஞை விளக்குகள் எரிந்த போதிலும், ரயில் கடவையிலுள்ள பாதுகாப்பு வேலி மூடப்பட்டிருக்காததை, ரயிலின் சாரதி அவதானித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இதையடுத்து, பாரிய பிரியத்தனத்திற்கு மத்தியில், ரயிலை சாரதி நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து, ரயிலில் இருந்து இறங்கிய சாரதி, பாதுகாப்பு வேலியில் கடமையிலிருந்தவரை தேடியுள்ளார்.

𝑰𝑻𝑴▪️குறித்த நபர் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நிலையில், அவரை எழுப்பி, வேலியை மூடுமாறு அறிவித்துள்ளார்.

இதையடுத்து, பாதுகாப்பு வேலி மூடப்பட்டதை அடுத்து, ரயில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️இந்த சம்பவம் குறித்து கந்தேகொட ரயில் நிலையத்தின் பொறுப்பதிகாரி கருத்து வெளியிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️குறித்து கடவையிலிருந்த பாதுகாவளர், அன்றைய தினம் மதுபோதையில் இருந்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரி கூறுகின்றார்.

 𝑰𝑻𝑴▪️எவ்வாறாயினும், ரயில் சாரதியின் முயற்சி காரணமாக பாரிய விபத்தொன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.