வத்தளையில் ஐஸ்ஸுடன் மேலும் ஒருவர் கைது.மொத்தமாக 128 KG மீட்பு.

வத்தளையில் ஐஸ்ஸுடன் மேலும் ஒருவர் கைது.மொத்தமாக 128 KG மீட்பு.

𝑰𝑻𝑴▪️வத்தளை − ஹுனுபிட்டி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️நேற்றைய தினம் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

𝑰𝑻𝑴▪️கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வசமிருந்து 2.433 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

27 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️வத்தளை பகுதியில் கடந்த 10ம் திகதி நடத்திய சோதனையில் 113 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 101 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்

𝑰𝑻𝑴▪️குறித்த சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைகளின் ஊடாக ஜாஎல பகுதியிலிருந்து 15 KG ஐஸ் போதைப்பொருளுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

𝑰𝑻𝑴▪️அதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, சப்புகஸ்கந்த பகுதியிலிருந்து 100 KG ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

𝑰𝑻𝑴▪️இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக 128 KG ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴▪️இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.