வரலாற்றில் இன்று – 29.05.2021 மே 29 கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 29.05.2021


மே 29  கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1453 – ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

👉1660 – இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.

👉1677 – வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

👉1727 – இரண்டாம் பீட்டர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.

👉1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை “பனஸ்ட்ரே டார்லெட்டன்” தலைமையிலான படைகள் கொன்றனர்.

👉1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

👉1848 – விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

👉1864 – மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான்.

👉1867 – ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.

👉1869 – பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.

👉1886 – வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.

👉1903 – சேர்பியாவின் மன்னன் அலெக்சாண்டர் ஒப்ரெனோவிச் மற்றும் அராசி திராகா இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

👉1914 – புனித லோரன்ஸ் வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து பயணிகள் ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் கொல்லப்பட்டனர்.

👉1919 – ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.

👉1947 – இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.

👉1953 – முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.

👉1972 – டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று ஜப்பானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

👉1982 – இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

👉1985 – பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மைதானத்தீன் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

👉1988 – அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் முதற்தடவையாக சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் செய்தார்.

👉1990 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.

👉1999 – டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.

👉1999 – 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தெரிவு செய்தனர்.

👉2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1872 – சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)

👉1890 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (இ. 1976)

👉1917 – ஜோன் எஃப். கென்னடி, ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)

👉1942 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)

👉1984 – கார்மெலோ ஆந்தனி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

👉1926 – அப்துலாயே வாடே, செனிகல் நாட்டின் 3வது அரசுத்தலை8வர்

👉1929 – பீட்டர் ஹிக்ஸ், ஆங்கிலேய-ஸ்கொட்டிய இயற்பியலாளர்


இன்றைய தின இறப்புகள்.


👉1829 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1778)

👉1892 – பகாவுல்லா, பாரசீக ஆன்மிகத் தலைவர், பகாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1817)

👉1911 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1836)

👉1958 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பி. 1881)

👉1979 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை (பி. 1892)

👉1987 – சரண் சிங், இந்தியக் குடியரசின் 7வது பிரதமர் (பி. 1902)

👉2005 – ஹாமில்டன் நாகி, தென்னாப்பிரிக்க மருத்துவ உதவியாளர் (பி. 1926)

👉2009 – சோ. கிருஷ்ணராஜா, இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பி. 1947)


இன்றைய தின சிறப்புகள்.


👉நைஜீரியா – மக்களாட்சி நாள் (1999)

👉ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.