வரலாற்றில் இன்று – 30.05.2021 மே 30 கிரிகோரியன் ஆண்டின் 150 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 151 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன.

 வரலாற்றில் இன்று – 30.05.2021



மே 30 கிரிகோரியன் ஆண்டின் 150 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 151 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1431 – நூறாண்டுகள் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.

👉1539 – தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.

👉1588 – 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா என்ற 130 ஸ்பானியப் போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து புறப்பட்டட்து.

👉1635 – முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

👉 1815 – இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.

👉1845 – திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.

👉1883 – நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர்.

👉1913 – முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.

👉1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.

👉1971 – செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.

👉1972 – இஸ்ரேலின் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

👉1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அதிபர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

👉1987 – கோவா தனி மாநிலமாகியது.

👉1998 – வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

👉2003 – எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1899 – மணிக்கொடி சீனிவாசன், தமிழ், ஆங்கிலப் பத்திரிகையாளர் (இ. 1975)

👉1931 – சுந்தர ராமசாமி, நவீன தமிழ் இலக்கியத்தின் எழுத்தாளர் (இ. 2005)

👉1934 – அலெக்சி லியோனொவ், சோவியத்/ரஷ்யாவின் விண்வெளி வீரர்.

👉1958 - கே. எஸ். ரவிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர்.

👉1961 - வி. ரவிச்சந்திரன் பிரபல கன்னட திரைப்பட நடிகர், இயக்குனர், மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்.

👉1971 - ரெசுல் பூக்குட்டி இந்தியத் திரைப்பட ஒலி வடிவமைப்பாளர், ஒலித் தொகுப்பாளர் மற்றும் ஒலிக்கலவை கலைஞர்.

👉1971 - லேடின மென்ஸில் அமெரிக்கா நாட்டின் திரைப்பட நடிகை. பாடகர் மற்றும் பாடலாசிரியர்.

👉1977 - கோபி சுந்தர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர்.

👉1993 - அவந்திகா மிஸ்ரா இந்திய திரைப்பட நடிகை.


இன்றைய தின இறப்புகள்.


👉1431 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரெஞ்சு வீராங்கனை (பி. 1412)

👉1960 – போரிஸ் பாஸ்ரர்நாக், ரஷ்ய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1890)

👉1973 – மோகன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (பி.1916)

👉1981 – சியாவுர் ரகுமான், வங்காள தேச அதிபர் (பி. 1936)


இன்றைய தின சிறப்புகள்.


👉திரினிடாட் டொபாகோ – இந்தியர்களின் வருகை நாள் (1845)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.