சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையில் மீட்கப்பட்ட சடலம், 54 வயதுடைய மந்திரவாதி ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 


சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் களனி கங்கையில்

 மீட்கப்பட்ட சடலம், 54 வயதுடைய மந்திரவாதி ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்நபருடன் தொடர்பு வைத்திருந்த பெண், மற்றுமொரு நபருடன் கொண்டிருந்த முறையற்ற உறவு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று (29) கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணால பகுதியில் களனி கங்கையில் கடந்த 26ஆம் திகதி சங்கிலியால் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம், ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய மந்திரவாதி ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, மந்திரவாதியுடன் முறையற்ற உறவு வைத்திருந்த பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

சடலமாக மீட்கப்பட்ட மந்திரவாதியும் கைது செய்யப்பட்ட பெண்ணும் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் எம்புல்கம பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 23ஆம் திகதி, இருவர் வீட்டுக்குள் புகுந்து மந்திரவாதியைக் கடத்திச் சென்றுள்ளதாகக் கைதுசெய்யப்பட்டுள்ள பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணுக்கும் கல்குவாரியில் வேலைபார்க்கும் எல்புல்கம பகுதியைச் சேர்ந்த சாரதிக்கும் இடையில் தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளமை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, பனுவஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சாரதியும், ஹோமாகம - பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய அவரது உறவினரான நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், கொலைக்குப் பயன்படுத்திய சுத்தியல், மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஹங்வெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.