தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, மசாஜ் நிலையங்கள் எனும் போர்வைக்குள் மறைத்து, விபசாரம் செய்த, இரண்ட மத்திய நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

 தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, மசாஜ் நிலையங்கள் எனும்

 போர்வைக்குள் மறைத்து, விபசாரம் செய்த, இரண்ட மத்திய நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.


ராஜகிரிய குரே மாவத்தை மற்றும் எத்துல்கோட்டை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்விரு நிலையங்களும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

அவ்விரு மத்திய நிலையங்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 20க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுகளுடைய பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விரு நிலையங்களையும் முகாமைத்துவம் செய்தவர்கள் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள், சிலாபம், கெக்கிராவ, அங்குணகொலபெலஸ்ஸ, நெலுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கொழும்பு பிரதேசத்தில், ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதாகவே தங்களுடைய வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு, அப்பெண்கள் வீட்டிலிருந்து வந்துள்ளனர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் “அப்” (செயலி) ஊடாகவே, இப்பெண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். அந்த மத்திய நிலையங்களுக்குள் 2,500 ரூபாய்க்கே பெண்ணொருவர் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.