வீதிகளில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகின்றன – தையல்கடைகள் கூட திறந்திருக்கின்றன – கொரோனா பரவல் குறையவில்லை – போக்குவரத்து கட்டுப்பாடுகள் என்பது ஒரு ஏமாற்றுநடவடிக்கை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀



 வீதிகளில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகின்றன – தையல்கடைகள் கூட திறந்திருக்கின்றன – கொரோனா பரவல் குறையவில்லை – போக்குவரத்து கட்டுப்பாடுகள் என்பது ஒரு ஏமாற்றுநடவடிக்கை-

 சிலோன்டுடே நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் போலியானவை என தெரிவித்துள்ள சிலோன்டுடே வீதிகளில் வாகனங்கள் நிறைந்து காணப்படுகின்றன தையல்கடைகள் கூட திறந்து காணப்படுகின்றன கொவிட் பரவல் குறையவில்லை என குறிப்பிட்டுள்ளது. 

கடந்த சில நாட்களில் இடம்பெறும் விடயங்களை பார்த்தபின்னர் வாரத்திற்கு வாரம் நீடிக்கப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் போலியானவை என தெரிவிப்பதில் தவறில்லை என சிலோன்டுடே தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகள் மூலம் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி விட்டதாக அதிகாரிகள் எவ்வளவு தூரம் தம்பட்டமடித்துக்கொண்டாலும் வீதிகளிற்கு செல்லும்போது போக்குவரத்து நெரிசலையும் ஒவ்வொரு சந்தியிலும் கடைகள் திறந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது என சிலோன்டு டே தெரிவித்துள்ளது.

 இங்கு இடம்பெறுவது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கை இது வேடிக்கையானது ஒரு சிறுவனிற்குகூட இதனை புரிந்துகொள்ளமுடியும் நாட்டின் ஒவ்வொரு வீதியிலும் சந்தியிலும இது தென்படுகின்றது எனவும் சிலோன்டுடே தெரிவித்துள்ளது.

 அத்தியாவசியசேவைகளுடன் தொடர்புபட்ட வாகனங்களிற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றால் கொழும்பின் அனைத்து வீதிகளும் எவ்வாறு போக்குவரத்தினால் நிரம்பி வழிகின்றன என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என சிலோன்டுடே தெரிவித்துள்ளது. 

மருந்தகங்கள் மாத்திரம் திறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய கடைகளும் திறந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும சிலோன் டுடே தெரிவித்துள்ளது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவது வெறும் வார்த்தை அளவிலேயே உள்ளதால் பொதுமக்களும் நாடும் மேலும் துயரத்தை சந்திக்கின்றது என்பதையும் மக்கள் நாளாந்தம் கொவிட் 19ற்க்கு பலியாகிக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஏன் அதிகாரிகள் புரிந்துகொள்ள மறுக்கின்றனர் என்ற ஆழமான கரிசனை எழுந்துள்ளது எனவும் சிலோன்டுடே தெரிவித்துள்ளது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.