கொரோனா மரணங்கள் குறித்து உரிய தருணத்தில் புள்ளிவிபரங்களை வெளியிடாத அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀



 கொரோனா மரணங்கள் குறித்து உரிய தருணத்தில் புள்ளிவிபரங்களை வெளியிடாத அதிகாரிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் கொவிட் உயிரிழப்புகள் குறித்து உரிய தருணத்தில் புள்ளிவிபரங்களை வெளியிடாத அதிகாரிகளிற்கு எதிராக சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தொடர்ச்சியற்ற விதத்தில் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் வைத்தியர்சந்திக எபிடக்காடுவ தெரிவித்துள்ளார்.

 101 பேரின் உயிரிழப்பு குறித்து ஒரேநாளில் விபரங்கள் வெளியானமை மக்கள் மத்தியில் மனஅமைதியின்மையை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஒரே நாளில் இந்த மரணங்கள் நிகழவில்லை என்பது புலனாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பலநாள் உயிரிழப்புகளே ஒரே நாளில் வெளியாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிடும் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக உள்ள தொற்றுநோய் பிரிவினருக்கும் ஏனையவர்களிற்கும் எதிராக தொடர்ச்சியற்ற தவறான புள்ளிவிபரங்களை வெளியிட்டமைக்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வாறான புள்ளிவிபரங்களை உடனடியாக வெளியிடவேண்டியது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.