கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட ஊழியர்களுக்கு ஒவ்வாமை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட ஊழியர்களுக்கு ஒவ்வாமை 


கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, நேற்று (24) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளானமையால், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்று (25) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள், இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் தொழிற்சாலை வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

ஊழியர்கள், தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டு வருவதால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.