இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா - 33 வைரஸ் மாதிரிகளும் ஆய்வில் கண்டுபிடிப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா - 33 வைரஸ் மாதிரிகளும் ஆய்வில் கண்டுபிடிப்பு 


மனிதர்களுக்கு பரவும் எல்பா மற்றும் பீட்டா ஆகிய கொவிட் மாறுபாடுகள் கொண்ட இரண்டு வகைகள் விசேட வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த கண்டுபிடிப்பு குறித்த ஆய்வு அறிக்கையை சர்வதேச vaccine சஞ்சிகையில் வெளியிட ஆராய்ச்சி குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2017ஆம் ஆண்டு Identification of Emerging Eqents என்ற தலைப்பின் கீழ் இந்த பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவ கூடிய வைரஸ் தொடர்பில் இலங்கையில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படம்டது. கொஸ்லந்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வெளவால் குகையை அடிப்படையாக கொண்டு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்த ஆய்வுக்குழு உறுப்பினரான கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனத்தின் பேராசிரியரான தேஜானி பெரேரா தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வு நடவடிக்கை்காக 395 வெளவால்களின் மாதிரிகள் சேர்க்கப்பட்டுள்ளது. விலங்குகளின் மாதிரிகள் மற்றும் மலக்குடலில் இருந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 33 வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட எல்பா மற்றும் பீட்டா கொவிட் வைரஸ் மாறுபாடு தற்போது பல நாடுகளில் பரவும் பிரித்தனியா எல்பா அல்லது தென்னாப்பிரிக்காவின் பீட்டாவின் துணை வகைகள் அல்ல. 

ஆனால் இவை கொவிட் வைரஸின் நான்கு முதன்மை மாறுபாடுகளில் இரண்டாகும். எனினும் இந்த மாறுபாடுகள் மனிதர்களின் உடலில் பரவி கொவிட் வைரஸ் வரை கொண்டு செல்லுமா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. 

ஆனாலும் மக்கள் வௌவால்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.