விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது

ராஜகிரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

இதன்போது நான்கு பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவல, கூரே மாவத்தை மற்றும் எதுல் கோட்டே ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

 வனாதவில்லுவ,அங்குனாகொலபெலெஸ்ஸ,எம்பிலிப்பிட்டிய,களனி ஆகிய பகுதிளைச் சேர்ந்த 21 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் கொழும்பிலுள்ள ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 முற்றுகையிடப்பட்ட இரண்டு இடங்கள் ஏற்கனவே சுற்றிவளைக்கப்பட்டவை என தெரிவிக்கும் காவல்துறை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.