ஓய்வு பெறும் நாளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பஸ் சாரதி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀



 ஓய்வு பெறும் நாளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பஸ் சாரதி

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பலங்கொடை டிப்போவில் 30 வருடங்கள் சாரதியாக பணியாற்றிய சமன் ஹேம குமார என்பவர் நேற்றைய தினம் ஓய்வு பெற்றுள்ளார்.

 அவர் 30 வருடங்கள் பணியாற்றிய தனது பஸ்ஸிற்கு முன்னால் மண்டியிட்டு வணங்கி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தான் பணியாற்றிய காலப்பகுதியில் பலங்கொடை - ராஸ்ஸகல வீதி உட்பட பல வீடுகளில் பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களை பணிக்கு அழைத்து சென்றுள்ளார். 

அத்துடன் ஏனைய பயணிகளுக்கான சேவையையும் அவர் தாமதமின்றி உரிய நேரத்தில் மேற்கொண்டமையினால் அவர் அனைவரதும் பாராட்டுக்களை பெற்ற ஒரு சாரதியாவார். 

இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்றவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸிற்கு மண்டியிட்டு வணங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.தொழில் மீதான அவரது ஈர்ப்பினை பலரும் பாராட்டியுள்ளனர். https://ift.tt/3bgkArn
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.