கழிவுத் தேயிலை 80 மூட்டைகளை கைப்பற்றிய பொலிஸார்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
கழிவுத் தேயிலை 80 மூட்டைகளை கைப்பற்றிய பொலிஸார்.
கண்டி, கெலிஓயா - பூவெலிகடவில் இருந்து வெலம்பொட பகுதிக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கழிவுத் தேயிலையை கடத்துவதற்கு முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனும், கழிவுத் தேயிலை 80 மூட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெலம்பொட பகுதியில் இருந்து லொறிகளில் கழிவுத் தேயிலை கடத்தப்பட்ட நிலையில் அவற்றை பொலிஸார் மடக்கிப் பிடித்து கடத்தலை முறியடித்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகின. எனவே, லொறியில் கடத்தினால் தான் சிக்கல் என எண்ணிய நபர்கள், இம்முறை கடத்தலுக்கு சொகுசு வேன் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் வெலம்பொட பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கெலிஓயா, பூவெலிகட பகுதியில் இருந்து கழிவுத் தேயிலையை ஏற்றிவந்த வேன், வெலம்பொடை பகுதியில் இவைத்து நேற்றிரவு மடக்கிப் பிடிக்கப்பட்டது. கைதானவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.