சுயநினைவு திரும்பல. மூளை ஆபரேஷனுக்கு பிறகு அர்ச்சனாவின் நிலை என்ன? மகள் சாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

சுயநினைவு திரும்பல. மூளை ஆபரேஷனுக்கு பிறகு அர்ச்சனாவின் நிலை என்ன? மகள் சாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் Bigg boss archanaவின் நிலை குறித்து அவருடைய சகோதரி அனிதாவும், 14 வயது மகள் சாராவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ இளமை புதுமை நிகழ்ச்சிகளின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி லைம் லைட்டுக்கு வந்தவர் சின்னத்திரை பிரபலமான அர்ச்சனா எனும் BiggBoss VJ Archana. 

90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஆங்கராக விளங்கிய அர்ச்சனா சில ஆண்டுகளுக்கு பின் குடும்ப வாழ்க்கையை கவனிப்பதற்காக சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். 

ஜீ டிவியிலும், விஜய் தொலைக்காட்சியிலும் பல ஷோக்களில் கலந்து கொண்டாலும் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் தமிழகம் முழுவதும் நட்சத்திரமாக மாறினார். அர்ச்சனா சமீபத்தில் தான் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். 

இந்த நிலையில் மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சனாவுக்கு திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவரே இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டார். மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ள அர்ச்சனா, அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

 அதில், ஹலோ எனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் குடும்பத்தினர்கள், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பதாக நம்புகிறேன். எப்போதும் இதயத்திலிருந்து இயங்கும் ஒரு பெண் நான். அதனால் என் மூளை கோபமடைந்து என் இதயத்தை விட அது வலிமையானது என்று எனக்குக் காட்ட விரும்பியுள்ளது. தற்போது அது ஒரு சிறிய பிரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. 

அது என் மண்டை ஓட்டை லேசாக பாதித்துள்ளது. அதில் இருக்கும் ஒரு சிறு துளையை நான் அடைக்க வேண்டியுள்ளது. இன்று எனக்கு ‘செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு’க்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் எனக்கு மூளை இருப்பது உறுதி செய்யப்பட்டதாக வேடிக்கையாக கூறியுள்ள அர்ச்சனா, இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது, அதன் பிறகு ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவேன். 

இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் சாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை உறுதி கூறுகிறேன். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அர்ச்சனாவின் நிலை குறித்து அவருடைய சகோதரி அனிதாவும், 14 வயது மகள் சாராவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். 

அர்ச்சனாவின் மகளான சாரா வெளியிட்டிருக்கும் சமீபத்திய அப்டேட்டில், தனது தாயாருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்ததாகவும், அவர் இன்னமும் மயக்க நிலையிலேயே இருந்து வருவதாகவும், தனது தாயார் அர்ச்சனா விரைவில் சுயநினைவை பெறுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

மூளை அறுவை கிசிக்கைக்கு பின்னர் ஒருவாரத்திற்கு மருத்துவமனையில் கழிக்க வேண்டும், அதன் பின்னர் தான் வீட்டுக்கு திரும்புவோம் எனவும் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.