279 அடி உயரத்திலிருந்து விழுந்த யுவதியைக் கண்டுபிடிக்க விஷேட நடவடிக்கைகள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

279 அடி உயரத்திலிருந்து விழுந்த யுவதியைக் கண்டுபிடிக்க விஷேட நடவடிக்கைகள். 


279 அடி உயரமுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்த யுவதியைத் தேடுவதற்காக திம்புல-பத்தன பொலிஸார் இன்று காலை முதல் விஷேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

நான்கு இளம் பெண்கள் நேற்று(18) டெவோன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்குச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. 

காணாமல் போனவர் தலவாக்கலை, லிந்துலவைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியான பவித்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளது. காணாமல் போன யுவதியைத் தேடும் நடவடிக்கையில் திம்புல-பத்தன பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேச வாசிகள் ஈடுபட்டுள்ளனர் என பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.