கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண் வீட்டில் மரணம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண் வீட்டில் மரணம்.


கொரோனா நோய்த்தொற்றுடன் 16 நாட்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மருத்துவ மனையிலிருந்து வெளியேறிய பெண் ஒருவர் மறுநாள் உயிரிழந்துள்ளார்.

 பிரேதப் பரிசோதனை நேற்று(18) மேற்கொள்ளப் பட்டபோது கொவிட் வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணம் எனத் தெரியவந்தது. இறந்தவர் அக்மீமனவின் ஜம்புகஸ்பாரவின் ஹியாரே பிரதேசத்தில் வசிக்கும் 62 வயது திருமணமாகாத பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 முன்னதாக உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல் மற்றும் வாந்தியுடன் அந்தப் பெண் காலி கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து 16 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

 மறுநாள் குறித்த பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

 சான்றுகள் மற்றும் மருத்துவப் பதிவுகளை ஆராய்ந்த பின்னர், குறித்த பெண் கொவிட் நிமோனியாவால் இறந்துவிட்டதாக சட்டமருத்துவ அதிகாரி குறிப்பிட்டார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.