இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட வைத்தியர்கள் - தாதியருக்கு கொரோனா.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட வைத்தியர்கள் - தாதியருக்கு கொரோனா. 

இரண்டு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

பதுளை தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் இரு வைத்தியர்கள் மற்றும் 05 தாதியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதுளை கிளைத் தலைவரும், ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளருமான வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார். 

இரண்டு கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த நபர்கள் பதுளை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.