கடந்த 18 மாதங்களில் இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தில் பாரிய பின்னடைவு - ஐ.நா விசேட அறிக்கையாளர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கடந்த 18 மாதங்களில் இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தில் பாரிய பின்னடைவு - ஐ.நா விசேட அறிக்கையாளர்.

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் கடந்த 18 மாதங்களில் மிகவும் மோசமடைந்திருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீளிடம்பெறாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி (Fabio Salviyoli) தெரிவித்துள்ளார்.

 அவர் இலங்கை குறித்த தமது அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 48வது கூட்டத்தொடரில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இதனைக் கூறியுள்ளார். 

இலங்கையில் உண்மை மற்றும் நீதியைத் தேடுவதற்கான நடவடிக்கைகள் போதிய அளவு முன்னெடுக்கப்படவில்லை. கடந்த 18 மாதங்களில் மனித உரிமை நிலைவரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. பொறுப்புக்கூறல் விடயங்களிலும் முன்னேற்றமில்லை.

 இந்த விடயங்கள் நிலைமாறுகால நீதி வழங்கல் செயல் முறையையும் பாதித்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வாறாயின் அரசாங்கம் தமது பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தச் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.