எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை, ஓமானுடன் 20 வருடங்களுக்கு சலுகை கால கடன் ஒப்பந்தம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை, ஓமானுடன் 20 வருடங்களுக்கு சலுகை கால கடன் ஒப்பந்தம்.

நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை-ஓமான் இடையே கடன் ஒப்பந்தமொன்று கையெழுத்தாகவுள்ளது. 

3.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தமொன்றே இவ்வாறு கையெழுத்தாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 5 வருட சலுகைக் காலத்துடன் 20 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

தற்போதைய நிலைமையில் டீசல் ஒரு லீற்றரில் 35 ரூபாவும், ஒரு லீற்றர் பெற்றோலுக்காக 18 ரூபா நட்டத்தையும் எதிர்கொண்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 நாட்டின் எரிபொருள் தேவைக்காக மாதமொன்றுக்கு 350 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாகவும், தற்போது கொள்வனவு செய்யவுள்ள எரிபொருளானது ஒரு வருடத்திற்கு போதுமானதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.