மோட்டார் சைக்கிளில் முந்திச்சென்ற வேளை ஏற்பட்ட அனார்த்தம்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மோட்டார் சைக்கிளில் முந்திச்சென்ற வேளை ஏற்பட்ட அனார்த்தம்...

இரு இளம் வயதினர் பலி. தனமல்வில-வெல்லவாய பிரதான வீதியில் கித்துல்கொட, அலிமங்கட சந்தியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 திஸ்ஸமஹாராமவிலிருந்து வெல்லவாய நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை, வேன் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது லொறியொன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கடும் காயங்களுக்குள்ளானதுடன் பொதுமக்களின் உதவியுடன் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எனினும் அவ்வேளையில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் திஸ்ஸமஹாராம உடமத்தலவைச் சேர்ந்த லக்ஷித அத்தபத்து (19), எஸ்.ஆர். கவிந்து லக்ஷான் (19) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வேன் மற்றும் லொறியின் சாரதிகள் இருவரும் கைதுசெய்துள்ள தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 
👇👇👇
 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.