வரலாற்றில் இன்று நவம்பர் 17.2021

 வரலாற்றில் இன்று நவம்பர் 17.2021


நவம்பர் 17  கிரிகோரியன் ஆண்டின் 321 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 322 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 44 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.

👉1292 – ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார்.

👉1405 – சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது.

👉1511 – எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.

👉1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.

👉1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

👉1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.

👉1800 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தனது முதலாவது அமர்வை வாசிங்டன், டி. சி.யில் ஆரம்பித்தது.

👉1811 – ஒசே மிகுவேல் கரேரா சிலியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

👉1820 – கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

👉1831 – எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.

👉1869 – எகிப்தில், நடுநிலக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.

👉1873 – பெஸ்ட், பூடா, ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் அங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.

👉1878 – இத்தாலி மன்னர் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது. மன்னர் சிறு காயங்களுடன் தப்பினார்.

👉1903 – உருசியாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்செவிக் (பெரும்பான்மை), மேன்செவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.

👉1918 – யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.

👉1922 – முன்னாள் உதுமானிய சுல்தான் ஆறாம் மெகெமெத் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.

👉1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.

👉1939 – செக் நாட்டில் நாட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்நாளை நினைவுகூரும் முகமாக அனைத்துலக மாணவர் நாள் பல நாடுகளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

👉1947 – அமெரிக்க அறிவியலாளர்கள் ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் திரான்சிஸ்டரின் முக்கிய இயல்புகளைக் கண்டறிந்தனர். 20-ஆம் நூற்றாண்டின் மின்னணுவியல் புரட்சி ஆரம்பமானது.

👉1950 – லாமோ டோண்டிரப் டென்சின் கியாட்சோ என்ற பெயரில் திபெத்தின் 14வது தலாய் லாமாவாக முடிசூடினார்.

👉1953 – அயர்லாந்து, பிளாசுக்கெட் தீவுகளில் இருந்து அங்கு வாழ முடியாத சூழலில் எஞ்சிய குடிமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

👉1969 – பனிப்போர்: பேரழிவு ஆயுதங்களைக் குறைக்கும் முகமாக சோவியத், அமெரிக்க அதிகாரிகள் எல்சிங்கியில் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

👉1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய தானியங்கி ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.

👉1983 – தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது.

👉1989 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.

👉1993 – நைஜீரியாவில் இராணுவப் புரட்சி மூலம் அரசு கவிழ்க்கப்பட்டது.

👉1997 – எகிப்தில், அல்-உக்சுர் நகரில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர்.

👉2000 – பெருவில் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

👉2012 – எகிப்தில் தொடருந்துக் கடவை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 50 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

👉2013 – உருசியாவில் கசான் விமான நிலையத்தில் தத்தாரிஸ்தான் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்.

👉1865 – ஜான் சுடேன்லி பிளாசுகெட், கனடிய வானியலாளர் (இ. 1941)

👉1870 – வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், தமிழகப் புரவலர், தமிழறிஞர் (இ. 1920)

👉1870 – செர்கேய் பிளாசுக்கோ, உருசிய வானியலாளர் (இ. 1956)

👉1885 – சார்லசு ரோஷர், அமெரிக்கத் திரைப்பட ஒளிப்பதிவாளர் (இ. 1974)

👉1887 – பெர்னார்ட் மோண்ட்கோமரி, ஆங்கிலேய படைத்துறை அதிகாரி (இ. 1976)

👉1896 – லெவ் வைகாட்ஸ்கி, பலருசிய-உருசிய மெய்யியலாளர், உளவியலாளர் (இ. 1934)

👉1904 – இசாமு நொகுச்சி, அமெரிக்க கட்டிடக்கலைஞர், சிற்பி (இ. 1988)

👉1906 – சோய்செரோ ஹோண்டா, ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்த சப்பானியப் பொறியியலாளர் (இ. 1991)

👉1909 – சி. இலக்குவனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1973)

👉1917 – க. வேலாயுதம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)

👉1920 – ஜெமினி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர் (இ. 2002)

👉1922 – இசுட்டான்லி கோகென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்

👉1927 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)

👉1929 – பி. சி. சேகர், மலேசியத் தமிழ் வேதியியலாளர், இரப்பர் தொழிலை நவீனமயப் படுத்தியவர் (இ. 2006)

👉1930 – பிரேம்ஜி ஞானசுந்தரம், இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2014)

👉1942 – காயிங் கெக் இயேவ், கம்போடியக் குற்றவாளி

👉1942 – மார்ட்டின் ஸ்கோர்செசி, அமெரிக்க இயக்குநர், நடிகர்

👉1950 – கோகிலா மகேந்திரன், ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர், நாடகக் கலைஞர்

👉1951 – திருச்சி பிரேமானந்தா, இலங்கை-இந்தியத் துறவி (இ. 2011)

👉1952 – சிறில் ரமபோசா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி

👉1972 – ரோஜா செல்வமணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

👉1978 – கீர்த்தி ரெட்டி, தெனிந்தியத் திரைப்பட நடிகை

👉1982 – யூசுஃப் பதான், இந்தியத் துடுப்பாளர்

👉1983 – கிறிஸ்டோபர் பாலோனி, அமெரிக்க எழுத்தாளர்

இன்றைய தின இறப்புகள்.

👉1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி (பி. 1516)

👉1796 – இரண்டாம் கத்தரீன், உருசியப் பேரரசி (பி. 1729)

👉1858 – இராபர்ட்டு ஓவன், உவெல்சு செயற்பாட்டாளர் (பி. 1771)

👉1917 – ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (பி. 1840)

👉1928 – லாலா லஜபதி ராய், இந்திய அரசியல்வாதி (பி. 1865)

👉1973 – மிரா அல்பாசா, பிரான்சிய-இந்திய ஆன்மீகத் தலைவர் (பி. 1878)

👉1989 – திருச்சி லோகநாதன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1924)

👉2000 – இலூயீ நீல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1904)

👉2010 – பி. விருத்தாசலம், தமிழகத் தமிழறிஞர் (பி. 1940)

👉2012 – பால் தாக்கரே, மகாராட்டிர-இந்திய அரசியல்வாதி (பி. 1926)

👉2013 – டோரிஸ் லெசிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1919)

👉2013 – பூரணி, தமிழக எழுத்தாளர் (பி. 1913)

👉2013 – திடீர் கண்ணையா, நகைச்சுவை நடிகர் (பி. 1937)

👉2015 – பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (பி. 1920)

இன்றைய தின சிறப்பு நாள்.

👉அனைத்துலக மாணவர் நாள்.

👉உலக குறைப்பிரசவ தினம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.