இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 630 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக 630 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக 630 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வட மாகாணத்தில் 444 பாடசாலைகளும், மேல் மாகாணத்தின் புத்தளம் கல்வி வலயத்தில் 37 பாடசாலைகளும், சிலாபம் மற்றும் கிரிஉல்ல ஆகிய வலயங்களில் 11 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக மாகாண கல்வி இயக்குனர் ஜயலத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 கிரிஉல்ல வலய கல்வி அலுவலகம் நீரால் மூடப்பட் டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 அத்துடன் மேல் மாகாணத்தில் களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 15 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் எலபொத்த பிரதேசத்தில் 5 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 105 பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. 

அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் வெள்ள நிலைமை காரணமாக மாத்திரமே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரதேச கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.