இலங்கையிலும் தாஜ்மஹால்.
விட்டுச் சென்ற காதலிக்காக இலங்கையில் தாஜ்மஹால் கட்டிய நபர்
இலங்கையிலும் ஒரு தாஜ்மஹால் போன்ற காதல் சின்னம் இருப்பதை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை.
தன்னைப் பிரிந்து சென்ற காதல் தேவதையின் நினைவாக ஒரு ஆண் உருவாக்கிய காதல் நந்தவனம் ஒன்று இலங்கையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சுற்றுலா செல்வதற்கு மிகவும் அழகான அற்புதமான ஒரு தலம்.
கொழும்பில் இருந்து தெற்கு அதிவேகப் பாதையில் செல்வதாயின் வெலிபன்னயில் அதிவேகப் பாதைய விட்டு வெளியில் வந்து அளுத்கம, தர்கா நகர் கடந்து மத்துகம,யடதொல வீதியில் சென்றால் இந்த இடத்தை அடைய முடியும்.
இலங்கையின் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான ஜெப்ரி பாவாவின் சகோதரர், பேவிஸ் பாவா இதனை நிர்மாணித்துள்ளார்.
அவர் காதலித்த பெண் திடீரென்று அவரை விட்டு விலகிச் சென்ற துக்கத்தில் தனிமை, கவலை என்பவற்றை மறப்பதற்காக அதனை கலைத்துவ வடிவில் வெளிப்படுத்தியுள்ளார். அதன் பொருட்டு இந்த பூங்கா மற்றும் அங்குள்ள விடுதி உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.