ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் பலி.

ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இச் சம்பவம் ஹித்தோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திபுல்வெவ ஆற்றில் இடம் பெற்றுள்ளது.

வட்டரெக பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்துக்கு புனித யாத்திரை சென்ற மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் குறித்த ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹித்தோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.