திங்கள் முதல் பரீட்சை சான்றிதழ்கள் விநியோகம்!

எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D.தர்மசேன தெரிவித்தார்.

அதற்காக ஒன்லைன் முறையில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றதுடன் பரீட்சையில் 5,04,245 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 4,07,785 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். அதேவேளை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைஅய்தினம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.