10 மணித்தியால மின்வெட்டில் உண்மையில்லை.

𝑰𝑻𝑴 ✍️ 2023ஆம் ஆண்டு முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஜனவரி மாதம் முதல் தினமும் 10 மணிநேரம் மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நேற்றைய தினம் (20) தெரிவித்திருந்தது.

𝑰𝑻𝑴 ✍️ குறித்த கருத்தினைவெளியிட்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அமைச்சர் குறிப்பிட்டார்.

𝑰𝑻𝑴 ✍️ மின் உற்பத்திக்கான நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அடுத்த சில நாட்களில் 300 மெகாவோட் மின் உற்பத்தியை இழக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.