வரலாற்றில் இன்று டிசம்பர் 24.2022

திசம்பர் 24  கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன

❇️ இன்றைய தின நிகழ்வுகள்

640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார்.

1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.[1]

1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.

1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.

1814 – பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.

1846 – பிரித்தானியர் புரூணையிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது.

1851 – அமெரிக்கக் காங்கிரசு நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.

1865 – அமெரிக்காவின் இரகசிய அமைப்பான கு கிளக்சு கிளான் தோற்றுவிக்கப்பட்டது.

1906 – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.

1913 – மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறித்துமசு கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.

1914 – முதலாம் உலகப் போர்: கிறித்துமசு தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

1924 – அல்பேனியா குடியரசாகியது.

1939 – இரண்டாம் உலகப் போர்: திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு கிறித்துமசு நாள் அமைதி அமைதி காக்கக் கோரிக்கை விடுத்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.

1951 – லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார்.

1953 – நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.

1966 – அமெரிக்கப் படையினரை ஏற்றிச் சென்ற கனடாஏர் விமானம் தெற்கு வியட்நாமில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 129 பேர் உயிரிழந்தனர்.

1968 – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.

1969 – வடகடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

1974 – ஆத்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் இறந்தனர்.

1994 – ஏர் பிரான்சு விமானம் 8969 அல்ஜியர்சில் கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த இக்கடத்தலின் முடிவில் மூன்று பயணிகளும் நான்கு கடத்தல்காரரும் கொல்லப்பட்டனர்.

1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், தில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பேர் விடுவிக்கப்பட்டனர்.

2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2005 – டிசம்பர் 18 இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் சூடான் மீது போரை அறிவித்தது.

2008 – உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

❇️ இன்றைய தின பிறப்புகள்

1166 – இங்கிலாந்தின் ஜான் (இ. 1216)

1740 – ஆண்டர்சு இலெக்செல், பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1784)

1761 – ழீன் உலூயிசு பொன்சு, பிரான்சிய வானியலாளர் (இ. 1831)

1818 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1889)

1822 – மேத்யு அர்னால்ட், ஆங்கிலேயக் கவிஞர், திறனாய்வாளர் (இ. 1888)

1837 – பவேரியாவின் எலிசபெத் (இ. 1898)

1822 – சார்ல்ஸ் ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலர் (இ. 1901)

1881 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (இ. 1958)

1896 – மங்காராம் உதராம் மல்கானி, சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (இ. 1980)

1905 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்கத் தொழிலதிபர், பொறியியலாளர், விமானி (இ. 1976)

1924 – முகமது ரபி, இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)

1924 – நாராயண் தேசாய், காந்தியவாதி, நூலாசிரியர் (இ. 2015)

1932 – மதன் லால் மேத்தா, இந்திய இயற்பியலாளர் (இ. 2006)

1938 – சுரேஷ் கிருஷ்ணா, இந்தியத் தொழிலதிபர்

1939 – இல. செ. கந்தசாமி, தமிழறிஞர், இதழாளர் (இ. 1992)

1944 – ஆஸ்வால்டு கிராசியாஸ், இந்தியப் பேராயர், கருதினால்

1946 – நா. மம்மது, தமிழிசை ஆய்வாளர், எழுத்தாளர்

1957 – ஹமித் கர்சாய், ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவர்

1959 – அனில் கபூர், இந்திய நடிகர்

1964 – தமிழ்மகன், எழுத்தாளர்

1969 – எட் மிலிபாண்ட், ஆங்கிலேய அரசியல்வாதி

1971 – ரிக்கி மாட்டின், புவெர்ட்டோ ரிக்கோ-அமெரிக்கப் பாடகர்

❇️ இன்றைய தின இறப்புகள்

1524 – வாஸ்கோ ட காமா, போத்துக்கீச இந்தியாவின் ஆளுநர், மாலுமி (பி. 1469)

1950 – பி. ஜி. வெங்கடேசன், திரைப்பட நடிகர்

1973 – ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)

1987 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழக நடிகர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (பி. 1917)

1997 – டோஷிரோ மிபூன், சீன-சப்பானிய நடிகர் (பி. 1920)

2002 – வி. கே. ராமசாமி, தமிழ் திரைப்பட நடிகர் (பி. 1926)

2005 – ஜோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)

2005 – பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)

2008 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1930)

❇️ இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (லிபியா)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.