முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாம்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் தற்போது முட்டையின் விலை 50 - 60 ரூபாய் வரையில் இருப்பதாகவும், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிக்கும் நிலையில் இந்த விலை உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி ஒக்ரே ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் கால்நடை தீவனத்தின் விலை உயர்வு மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு என பல பிரச்னைகள் எழுந்துள்ளதாகவும் வெறும் கலந்துரையாடல்ளை மட்டும் நடத்தி தீர்வு காண முடியாது என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.

நமது உணவில் விலங்கு புரதம் இருப்பது அவசியம். குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மட்டுமின்றி நம் அனைவருக்கும் பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் இருந்து புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.