இலங்கையில் திடீரென அதிகரித்த தேங்காய் விலை - வெளியான தகவல்.

இலங்கையில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பெரிய அளவு கொண்ட தேங்காய் ஒன்று 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், சிறிய அளவு கொண்ட தேங்காய் 100 ரூபாவிற்கும், நடுத்தர அளவினை உடைய தேங்காய் 175 முதல் 200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் முழுத் தேங்காய் கொள்வனவு செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்காக சில கடைகளில் உடைத்த தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.