பிறர் தவறுகளை மன்னிப்போம்.
எவராவது செய்து விட்ட தமது தவறுகளை நினைத்து வருந்தி நம்மிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயம் நாமும் அவற்றை மறந்து, மனமுவந்து நமது மன்னிப்பை வழங்க வேண்டும்...
ஒருவர் தவறிழைக்கும் பொழுது அல்லது தீங்கினை இழைக்கும் பொழுது அவர்கள் மீது எந்தவித வன்மமும் மனதில் வைத்துக் கொள்ளாமல் முழுமையாக மன்னித்து விட வேண்டும்..
மனம் முழுவதும் அவரவர்களின் குற்றங்களைப் பட்டியலிட்டு வைத்திருப்பதில் நமக்கு என்ன பலன்...?
நீங்கள் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பின் பலன் புரிய வரும் உங்களுக்கு.
அதுபோல, நீங்கள் செய்து விட்டத் தவறுக்காக நீங்கள் எவரிடமாவது மன்னிப்பைப் பெற்றுப் பாருங்கள். அப்போது தான் உங்களுக்கு மன்னிப்பின் அருமை புரியும்.
ஆனால் மன்னிப்பதற்கு முதலில் மனம் வர வேண்டும். உதட்டளவில் ‘உன்னை நான் மன்னித்து விட்டேன்’ என்று சொல்லி விட்டு, மனம் முழுவதும் பகைகளை அடுக்கி வைத்திருப்பதில் எவ்விதப் பொருளும் இல்லை.
பழிவாங்கும் எண்ணம், கோபம், வெறுப்பு ஆகிய தன்மைகளுடன் வாழ்ந்தால், அவை நம்மை ஆள்கின்றது, ஆட்டுவிக்கின்றது.
இந்நிலை நம்மிடம் இருந்து நீங்க புதுமையான வழி, நமது பகைவர்களை மன்னித்து, அவர்களின் குற்றம், குறைகளை முற்றிலுமாக மறந்து விடுவது தான்.
நமது கோபத்தை அடக்கினால் மட்டும் போதாது. கூடவே நமது மன்னிப்பையும் அதனுடன் சேர்த்தே வெளிப்படுத்த வேண்டும்.
ஆம் நண்பர்களே...!
மன்னிக்கும் தன்மை நம்மிடம் தன்னம்பிக்கையை, அதிகரிக்கச் செய்து நம் ஆளுமையை வளப்படுத்துகிறது...!
பகைமையை மறந்து, நட்புறவை வளர்ப்பதன் மூலம் அன்பு நிலை நாட்டப்படுகிறது. உறவுகள் மலர்கிறது...!!
இயன்றவரை அனைவரையும் மன்னிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் பொழுது மரியாதையும் மகிழ்ச்சியும் நம்மிடமே இருக்கும்...!
நமது தவறுகளைத் தவிர்ப்போம், பிறர் தவறுகளை மன்னிப்போம்...!
உடுமலை சு. தண்டபாணி
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.