அயன்பொக்ஸால் மனைவியின் முகத்தை பதம்பார்த்த கணவன்!

 

𝑰𝑻𝑴 ✍️ குடும்ப தகராறில் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதில் அயன்பொக்ஸால் மனைவியின் முகம் மற்றும் முதுகு பகுதிகளில் சூடு வைத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இந்த சம்பவம் ஹாலி -எல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஹாலி -எல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ சந்தேக நபரின் மனைவியான 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ பாதிக்கப்பட்ட பெண் துணிகளை அயன்பண்ணிக் கொண்டிருந்தபோது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதனையடுத்து அவரது கையிலிருந்த மின் அழுத்தியை பறித்து மனைவியின் முகம், கழுத்து மற்றும் முதுகில் அழுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

𝑰𝑻𝑴 ✍️ தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு பின்னர் பெண் அடிக்கடி தாக்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ மேலும், அவரது உடலில் ஏற்கனவே பல தீக்காயங்கள் ஏற்பட்ட தழும்புகள் இருந்தமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.