பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு.

பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு தற்காலிக தீர்வு வழங்குவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மருந்துப் பொருள் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் தமது சங்கம் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புற்று நோய், தொற்றா நோய், வலி நிவாரணி, மயக்க மருந்து உள்ளிட்ட சுமார் 160 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட கால திட்டங்கள்

இந்த மருந்துப் பொருட்கள் அனைத்து களஞ்சியசாலைகளில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்துப் பொருட்கள் தொடர்பில் நீண்ட கால திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து மருந்துப் பொருள் உதவிகள் கிடைக்கப் பெற்றாலும், நீண்ட கால அடிப்படையில் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டொக்டர் ஹரித அலுத்கே தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.