பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான அறிவிப்பு.
இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்யும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பதிவுச் செயற்பாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் ஏதேனும் வெற்றிடங்கள் இருப்பின் வெற்றிடமான பாடநெறிகளுக்கான மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படும் என சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த 02 ஆம் திகதி வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான பாடப்பிரிவுகள் குறித்து மாணவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, அதற்கான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர்களை ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.