வானிலிருந்து விழுந்த விசித்திர தீப்பந்து..! தொடரும் மர்மம்.

சீனாவில் வானிலிருந்து எரிந்தவாறு விழுந்த ஒர் மர்மப்பொருள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலுள்ள Mengli என்னும் கிராமத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர், தான் வானிலிருந்து தீப்பந்து ஒன்று விழுந்ததைக் கண்டதாக கூறியுள்ளார்.

சீன சமூக ஊடகம் ஒன்றில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவற்றில், அந்த மர்மப்பொருள் விழுந்த இடத்திலிருந்து செம்மஞ்சள் நிறத்தில் புகை எழுவதையும், உலோகத்துண்டுகள் சிதறிக்கிடப்பதையும் காண முடிகிறது.

இதற்கிடையில், வானிலிருந்து விழுந்தது விமானம் ஒன்றாக இருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

அப்படி விழுந்தது விமானமாக இருந்தால், அந்தப் பகுதியில் வாழும் மக்களுடைய நிலைமை என்ன என சிலர் தங்கள் கவலையை வெளிப்படுத்த, அந்தத் தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், மனிதர்களுக்கோ, வீடுகளுக்கோ எந்த சேதமும் இல்லை என்றும் Longlin பகுதி தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், வானிலிருந்து விழுந்தது என்ன பொருள் என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.