மனைவியை மண்வெட்டி பிடியால் அடித்து கொன்ற கணவன்.

𝑰𝑻𝑴 ✍️ மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மது போதையில் மனைவியை மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்த கணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

𝑰𝑻𝑴 ✍️ கரடியன் குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரான ஜெயக்குமார் புவனேஸ்வரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ குறித்த வயல் பிரதேசத்தில் வேளாண்மை செய்துவரும் விவசாயி ஒருவரின் வயலுக்கு வேளான்மை காலலுக்கு அமர்தப்பட்ட கரடியன் குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளை கொண்ட வல்லிபுரம் ஜெயக்குமார் அவரது 10 வயதான மூத்த பிள்ளையை அவரது அம்மம்மாவுடன் தங்க வைத்துவிட்டு அவரது மனைவி மற்றும் 5 மற்றும் 3 வயது குழந்தையுடன் வயலில் காவலுக்காக அமைக்கப்பட்ட குடிசையில் தங்கி வந்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு வல்லிபுரம் ஜெயக்குமார் அவரது மனைவி ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றி சண்டையாக மாறியதையடுத்து அங்கிருந்த மண்வெட்டிப் பிடியினால் மனைவி மீது மேற்கொண்ட தாக்குதலில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

𝑰𝑻𝑴 ✍️ இதனையடுத்து மனைவி மீது தாக்குதல் மேற்கொண்ட 35 வயதுடைய வல்லிபுரம் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸ் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்து நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

𝑰𝑻𝑴 ✍️ இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.