மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை – பெற்றோருக்கு விசேட அறிவிப்பு.

இரத்மலானை மற்றும் கல்கிஸை பகுதிகளில் முக்கிய பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விற்பனைக்காக தயார்படுத்தி இருந்த 7,200 மில்லிகிராம் மாவா  போதைப்பொருடன் கல்சிசை பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதான சந்தேக நபர், கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட மாவா போதை பொருளை வீட்டிலிருந்து பொதி செய்து இரகசியமான முறையில் பாடசாலை வளவில் நடமாடி நீண்ட காலமாக விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிசையில் உள்ள முக்கிய பாடசாலைக்கு அருகாமையில் வீடொன்றில் இவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக தமது பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலை பகுதிகளில் சந்தேகமான முறையில் செயற்படும் விற்பனையாளர்கள் குறித்து கூடுதலான கவனம் செலுத்துமாறு பொலிஸார் பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த மோசடிகாரர்களிடமிருந்து மாணவர்களை மீட்டெடுப்பதற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோரிடம் பொலிஸார் விசேட கோரிக்கையை விடுத்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.