A/L பரீட்சை தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு.

2022 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய தினம் (23) உயர்தரபரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோர் உட்பட பொதுமக்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை குறித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 2,200 பரீட்சை நிலையங்களில், 278,196 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 331,709 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதற்கமைய விசேட போக்குவரத்து திட்டங்களை இலங்கை ரயில்வே திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் அறிவித்துள்ளன.

அந்தவகையில் பரீட்சை நாட்களில் குறிப்பாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் ரயில் ரத்து செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.