முச்சக்கரவண்டியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை.

தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பின்னர், குழந்தை லிதுல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியானது தினமும் ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், தலவாக்கலை லிதுல நகரசபை ஊழியர்கள் நகரை சுத்தப்படுத்த வந்த போது முச்சக்கரவண்டிக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டு பார்த்த போது குழந்தை ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

குறித்த குழந்தை பிறந்து சுமார் 12-14 நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் தொடர்பில் சிசிரிவி காணொளிகளை வைத்து தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லிதுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.