'எனக்கு எல்லாம் தெரியும்...!
எனக்குத் தான் எல்லாமே தெரியுமே என்பதில் இருக்கும் இன்பம் வேறு எதிலும் இல்லை..
நான் பெரியவன். எனக்கு எல்லாம் தெரியும். என் சொல்லினை எல்லோரும் செவிமடுக்க வேண்டும். என்னை வெல்ல எவரும் இல்லை. எல்லோரும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள். இது போன்ற ‘’நான்’’ என்ற எண்ணத்தை முதலில் அகற்றுங்கள்...
இந்த உலகத்தில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. எதுவும் தெரியாதவரும் எவரும் இல்லை...
நான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தால் அடியோடு அகற்றி விடுங்கள். மனிதனை மதிக்க வேண்டும். அவரது கருத்தையும் செவிமடுத்துக் கேட்க வேண்டும்...
அதில் நல்லவை இருந்தால் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. எனக்குக் கீழ்பதவியில் உள்ளவர் சொல்வதை எல்லாம் நான் ஏன் கேட்க வேண்டும்...?
எனக்குத் தெரியாதது இந்த உலகில் ஏதும் இல்லை!, என்ற சிந்தனையை உங்கள் மனதில் இருந்தால் முதலில் அதை அகற்றி விடுங்கள்.கற்றது கைமண்ணளவு , கல்லாதது உலகளவு என்ற ஔவையாரின் வாக்குப்படி, வாழ்க்கையில் கற்க வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அப்போது தான் நாம் தெரியாததை கற்றுக் கொள்ள முடியும்...
கற்பதற்கும் பெறுவதற்கும் நம்மிடம் வெற்றிடம் இருக்க வேண்டும்...!
ஆம் நண்பர்களே...!
எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவா்களால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது...!
தனக்குத் தெரிந்தது தான் முழுமையானது என்று எண்ணுபவரால் அறிவைப் பெற முடியாது...!!
எனக்கு எல்லாம் தெரியும் என்ற குழப்பத்தில் இருப்பவர்களைக் காட்டிலும்,எனக்கு எதுவும் தெரியாது என்று இருப்பவர்கள் தெளிவாக இருப்பார்கள்.எனக்கு எல்லாம் தெரியும் என்பது ஆணவத்தின் உச்சம்.எனக்கு இதுபற்றி தெரியாது என்பது தன்னடக்கம்.
உடுமலை சு. தண்டபாணி
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.