பல பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கறிவேப்பிலை.

பல பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கறிவேப்பிலை உணவின் சுவையை மேம்படுத்தும் பலர் இதை வீட்டு தொட்டிகளில் வளர்த்து வருகின்றனர்.

உணவின் சுவையை கூட்டுவதோடு கறிவேப்பிலை ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் கருதப்படுகின்றது.

பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, தாமிரம், வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கறிவேப்பிலையில் உள்ளன.

இது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். தினமும் காலையில் 3 முதல் 4 பச்சை இலைகளை மென்று சாப்பிட்டால் அது உடலுக்கு அபரிமிதமான நற்பலன்களை அளிக்கும்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகள்

❇️கண்களுக்கு நல்லது

கண்பார்வையை அதிகரிக்க உதவும் வைட்டமின் ஏ சத்து இதில் உள்ளதால் கறிவேப்பிலை சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் அல்லது கண் தொடர்பான பல நோய்கள் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுகிறது.

❇️நீரிழிவு நோய்க்கு உதவும்

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இரத்தச் சர்க்கரைக் குறைவு பண்புகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை மென்று சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

❇️செரிமானம் சிறப்பாக இருக்கும்.

கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இத்தோடு, மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு உப்பசம் உள்ளிட்ட அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

❇️ தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு

கறிவேப்பிலையில் பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன.

இது பல வகையான தொற்றுநோய்களைத் தடுக்கிறது. இதனால் நோய்களின் அபாயமும் தடுக்கப்படுகின்றது.

❇️எடை குறைப்பு

கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது.

இதில் எத்தில் அசிடேட், மஹானிம்பைன் மற்றும் டிக்ளோரோமீத்தேன் போன்ற சத்துக்கள் இருப்பதால் உடல் பருமன், எடை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இது மிக நல்ல தீர்வாக அமைகின்றது.

கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு குவிய ஆரம்பித்திருந்தால் இதை சரி செய்ய கறிவேப்பிலையை உட்கொள்ளலாம் அதில் ஆல்கலாய்டுகள் உள்ளன. இதன் உதவியுடன் கொழுப்பைக் குறைக்கலாம்.

இதன் சாற்றை குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு குறைவதுடன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் பராமரிக்கப்படும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.