வாழையில் இத்தனை நன்மைகளா!?

வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பல நன்மைகள் அடங்கியது.

வாழை இலையில் உணவு சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகம். வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ளது.

அத்தோடு நீரிழிவு மற்றும் வயதான தோற்றத்தை தவிரப்பதற்கு வாழைப்பூ நல்லது. அதே போல, வாழைத் தண்டிலும் அற்புதமான பலன்கள் நிரம்பியுள்ளது.

❇️ நச்சு நீக்கம் மற்றும் செரிமானம்.

வாழைத்தண்டு சாறு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது ஒரு டையூரிடிக் ஆகும்.

உங்கள் உடலமைப்பை நோய்களில் இருந்து சுத்தப்படுத்த மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.

வாழைத்தண்டு சாறு செரிமானத்திற்கு சிறந்தது. இது குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. உங்கள் குடலுக்கு நல்ல நார்ச்சத்தை அளிக்கும்.

❇️ சிறுநீரக கற்களை நீக்கும்.

வாழைத்தண்டு சாறுடன் ஏலக்காயை கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ப்பை தளர்வதோடு, சிறுநீரக கற்கள் வலி ஏற்படாமல் தடுக்கிறது.

தினமும் ஒரு கிளாஸ் வாழைத்தண்டு சாற்றில், எலுமிச்சை சாறின் சிறு துளிகளை கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.

இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் (UTI) ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தை திறம்பட போக்க உதவுகிறது.

❇️உடல் எடை இழப்பு

நார்ச்சத்துள்ள வாழைத்தண்டு, உடலின் செல்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்புகளின் வெளியீட்டை குறைக்கிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. அதனால், நீங்கள் இதை எவ்வித குற்ற உணர்ச்சியின்றி சாப்பிடலாம்.

❇️ கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை நிர்வகித்தல்

வைட்டமின் பி6 நிறைந்தது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இது பொட்டாசியத்துடன் செறிவூட்டப்பட்டுள்ளது. கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

❇️இரைப்பை பிரச்சனைகளை குணப்படுத்தும் .

உங்களுக்கு அடிக்கடி அசிடிட்டி பிரச்சனைகள் இருந்தால், வாழைத்தண்டு சாறு உங்கள் உடலில் அமில அளவைக் கட்டுப்படுத்தவும், சமநிலையை மீட்டெடுக்கவும் உதவுகிறது. இது நெஞ்செரிச்சல் மற்றும் அசௌகரியம் மற்றும் வயிற்றில் எரிவது போன்ற உணர்வுக்கு நிவாரணம் அளிக்கிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.