சேமிப்பு...! சேமிப்பு...!! சேமிப்பு...!!!

"சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று சொல்வார்கள். சேமிப்பை நம் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்புப் பழக்கம் தான்...

தேனீக்கள்!, தேனை சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின் போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்கள்...

ஒரு மனிதன் சேமிக்கப் பழகிக் கொள்ளும் போது சேமிப்பு எதிர்காலத்தில் பலவற்றுக்கு கரம் கொடுக்கும்...

வரவை மீறிக் கடன் வாங்கியாவது செலவு செய்வது , வழக்கத்தில் நமக்குத் துன்பம்  மட்டுமல்ல பெரும்பாலும் இழப்பைத் தான் கொடுக்கும். இதைத் தடுக்க, தவிர்க்க நமக்கு ஒரே வழி சேமிப்பு தான்...

உங்கள் குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வு காலச் செலவுக்கு பணம் எனப் பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்... 

உங்கள் வருவாயைக் கூட்ட வேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்...

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்…

Neither a borrower nor a lender be;

For loan oft loses both itself and friend,

And borrowing dulls the edge of husbandry.

கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அதோடு வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்...

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். பணம் உங்களுடையது. நீங்கள் உழைத்து சம்பாதித்தது. அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது நீங்களே  முடிவு செய்ய வேண்டும்...

சேமிப்பு என்பது உங்களின் வருங்கால வாழ்க்கையை எந்தவித தொந்தரவு இல்லாமல் வாழ்வதற்கு. உங்களைக் கேலி செய்வோர் நீங்கள் பணச் சிக்கலில் இருக்கும் போது யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை...

இதற்கு உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளலாம், ஒரு பைசா கூட சேமிப்பு இல்லாமல் என்னை நாடி வந்தவர்களுக்கு அனைத்தையும் கொடுத்து விட்டேன். இப்போது உணருகிறேன் சேமிப்பின் முக்கியத்தை.

ஆம் நண்பர்களே...!

நமது உறவுகள், நண்பர்கள் ஆபத்துக் காலத்தில் உதவுவார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்...!

என்னைப் போல் இன்று பணத்தின் மீது நீங்கள் அசட்டையாயிருந்தால் நாளை பணம் உங்களை அசட்டை செய்து விடும். அதை மறந்து விடாதீர்கள்...!!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நமது கையில் இருக்கும் பணம் தான் நமக்கு உதவி செய்யும். வேறு யார் வீட்டுப் பணமும் நமது ஆபத்துக்கு உதவாது...!!!

இது சுயநலமான உலகம். மற்றவர்கள் படும் துன்பத்தை  பார்த்துக் கண்டும் காணாமல் இருக்கும் உலகம். மீண்டும் மீண்டும் கூறுகிறேன். சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே நீங்கள் எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பதே உண்மை...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.