உடல் எடையை குறைக்கும் சோம்பு
நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
அதிகரிக்கும் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம்.
ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் விரும்பிய பலனை அடைய முடிவதில்லை.
எனினும் உடற்பயிற்சியுடன் சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
சரியான ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி வழக்கமான எடை இழப்புக்கு அவசியம்.
ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எடை குறைப்பில் மிக அதிக பலன்கள் கிடைக்கும்.
இதில் முக்கியமான ஒன்று சோம்பு. சோம்பு உடல் எடையை குறைக்க வெகுவாக உதவுகின்றது.
இதை உட்கொள்வதால் உடலைக் கட்டமைப்புடன் வைத்திருப்பதிலும் உதவி கிடைக்கிறது.
சோம்பின் நன்மைகள் ஏராளம். ஆனால் இதை சரியான முறையில் உட்கொள்வதும் மிக முக்கியமாகும்.
உடல் ஆரோக்கியத்தின் நண்பன் சோம்பு
தினமும் அதிகபட்சம் இரண்டு ஸ்பூன் சோம்பு உட்கொள்ள வேண்டும்.
உணவு உட்கொண்ட பின்னர் சோம்பை உட்கொள்ளலாம் அல்லது இதை தண்ணீரில் ஊறவைத்தும் குடிக்கலாம்.
சோம்பை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
விரைவான எடை இழப்புக்கு சோம்பை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
❇️ சோம்பு தூள்
ஒரு கைப்பிடி சோம்பை எடுத்து நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். தயிர், சர்க்கரை பாகு, டீ அல்லது காபி போன்ற எந்த பானத்தில் வேண்டுமானாலும் இந்த பொடியை கலக்கலாம்.
அதனுடன் வெந்தயம், கருப்பு உப்பு, பெருங்காயம் மற்றும் சர்க்கரை என சுவைக்கு ஏற்ப சேர்த்து உட்கொள்ளலாம்.
இதன் மூலம் இந்த பானத்தின் சுவை அதிகரிப்பதோடு இதன் ஆரோக்கிய நன்மைகளும் அதிகரிக்கும்.
இந்த பொடியை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தி அதன் மூலம் உடல் எடை குறையும்.
❇️ தண்ணீருடன்
சோம்பை தண்ணீருடன் கலந்து குடிப்பது வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் செரிமான பிரச்சனைகளைக் குறைக்க ஒரு பொதுவான வழியாக பார்க்கப்படுகின்றது.
ஒரு கைப்பிடி சோம்பு விதைகளை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும்.
இரவு முழுவதும் இதை அப்படியே வைத்திருந்து காலையில் குடிக்கவும். இது உடலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகபட்சமாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
இது எடை இழப்புக்கும் உதவுகிறது. இரண்டு கிளாஸ் சோம்பு தண்ணீரை உட்கொள்வது உடல் எடை இழப்புக்கு ஒரு நல்ல தீர்வாகும்.
இது உடல் பருமனை குறைக்க உதவும். இதை காலையில் ஒரு கிளாஸ் மற்றும் மாலையில் ஒரு கிளாஸ் என குடிக்க பழக்கப்படுத்திக்கொள்ளலாம்.
❇️ தேநீர்
சோம்பு விதைகள் கொண்டு தேநீர் தயாரிப்பது மிகவும் எளிமையானது ஆனால் நல்ல பயன்களை அளிக்கக்கூடிய ஒரு தீர்வாக இருக்கும்.
இதிலிருந்து அதிகபட்ச பலன்களைப் பெற இதை தினமும் குடிக்கலாம். உங்கள் மாலை தேநீர் தயாரிக்கும் போது கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி சொம்பு சேர்க்கவும்.
இது தவிர சோம்பு விதைகளுடன் அரை தேக்கரண்டி வெல்லத்தையும் சேர்த்து இந்த அற்புதமான தேநீரை ருசிக்கலாம்.
இது செரிமானத்தை மேம்படுத்தவும், வலியைக் குறைக்கவும், வாயின் சுவையை அதிகரிக்கவும், உடலை குளிர்விக்கவும் உதவும்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.