சோதனைகளும், துயரங்களும்.

மனித வாழ்க்கை என்பது இன்பம் மட்டுமே நிரம்பிய மலர்ப் பாதை அல்ல.தடைகளும், இடையூறுகளும், இழப்புகளும், சோதனைகளும் நிரம்பியது தான்.

சிலருக்கு வாழ்க்கையில் எல்லா இன்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறுகிறது. சிலருக்கோ அடுத்தடுத்து துன்பங்கள் தொடருகிறது...

எவ்வளவு தான் நாம் உண்மையுடன் உழைத்தாலும், முன்னேறினாலும் வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளை, துன்பங்களை,, சோதனைகளைக் கடந்து தான் சிகரங்களாய் அடைய வேண்டி இருக்கிறது..

துன்பங்கள், சோதனைகள் வரும் போது அதைத் தாங்கி, வெற்றிகரமாக வென்று முன்னேறுகிறவர்கள் தான் சிகரத்தை அடைகிறார்கள்..

ஒரு சமையல் கலைஞரின் மகள் வாழ்வில் எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்தார்..

“ஒரு நாள் தளர்ந்த மனதுடன் தன் தந்தையிடம் வந்தாள். தன் வாழ்வில் தான் படும் இல்லல்களை சொல்லி அழுதார்..

அவரது தந்தை அவளைத் தேற்றி, தன் சமையல் கூடத்திற்குள் அவளை அழைத்துச் சென்று ஒரு பாத்திரத்தில் செம்முள்ளங்கிகளை (கேரட்) இட்டு வேக வைத்தார்.

மற்றொரு பாத்திரத்தில் கோழி முட்டைகளைப் இட்டு வேக வைத்தார். சிறிது நேரம் கழித்து அவற்றை அடுப்பிலிருந்து இறக்கி இரண்டையும் தன் மகளிடம் காட்டி,

“என் அன்பு மகளே, முட்டையின் உட்பகுதி திரவமாய் இருந்தது. வெப்பத்தை எதிர்கொண்டதும் இறுகி விட்டது. செம்முள்ளங்கியின் உட்புறம் திடமாய் இருந்தது. வெப்பத்தை எதிர் கொண்டதும் இளகி விட்டது...

சோதனைகள் இந்த வெப்பம் போலத்தான்.. சோதனை வரும் போது செம்முள்ளங்கி போல இளகி விடாதே. முட்டை போல் திடமாகி விடு” என்று ஆலோசனை கூறினார்...

மகளுக்கு சமையலும் புரிந்தது. வாழ்க்கையின் மெய்யியலும் புரிந்தது...

ஆம் நண்பர்களே...!

🟡 யாருடைய வாழ்க்கையில் இடர்பாடு இல்லை..? வாழ்க்கைப் பாதை என்பதே கரடுமுரடு  நிறைந்ததாகத் தான்  இருக்கும். எல்லோர் வாழ்விலும் சோதனைகளும், வேதனைகளும் வந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக நாம் துவண்டு போய் விடக் கூடாது...!

🔴 வாழ்க்கையில் நிகழும் துன்பங்கள், துயரங்களை நேசியுங்கள். அதில் ஒவ்வொன்றிலும் நீங்கள் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு இருப்பீர்கள். வேதனைகள், சோதனைகளைத் தயக்கம் இன்றி தைரியமாக சந்திக்கத் தயாராகுங்கள்...!!

⚫ நினைவில் கொள்ளுங்கள். சோதனைகளையும், வேதனைகளையும் 

எதிர்கொள்பவர்கள் தான், சாதனையாளர்களாகிறார்கள். ஏற்பட்ட இடர்களை மறந்து ,நமக்கான கடமைகளை நிறைவேற்ற வாழ்க்கையை மகிழ்வுடன் தொடருங்கள்...!!!

🔘 வெற்றி உங்கள் பக்கம் தேடி வரும்...!

உடுமலை சு. தண்டபாணி

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.